புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு 28ஆம் தேதி வருகை
ஓகி புயல் வந்து தமிழ்நாடு, கேரளா கடலோர மாவட்டங்களை பெரிதும் பாதித்தது. மேலும், இதன் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் பலர் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி சில தினகளுக்கு முன்னர் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரியில் ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதன் மொத்த பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழு 28ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.
source : dinasuvadu.com