இந்தியாவில் அணைத்து ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் !

Default Image

மின்சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே துறை சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகளைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்கள், ஊழியர் குடியிருப்புகள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு விடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை நாடுமுழுவதும் உள்ள 3 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் 20 லட்சம் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

source:  dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்