வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Default Image

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கே 1760 கி.மீ தூரத்தில்  நிலை கொண்டுள்ளது.அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும் . வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்ரல்  30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் ஏப்ரல்  28-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்