முருகதாஸின் படத்திற்கு கோர்ட் தடை விதித்துள்ளது…!!!!
கடந்த சில காலமாக முருகதாஸ் எடுக்கும் கதைகள் திருடப்பட்டது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கத்தி, சர்க்கார் என பல படங்களில் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சர்க்கார் படத்தின் கதையும் என்னுடையது ஒரு இயக்குனர் முருகதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விசாரணை வரும் 30 ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், கத்தி படக்கதையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ரங்கதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ‘ கத்தி ‘ ரீமேக் உரிமைகளை விற்க இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையால் ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.