சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி …!தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எற்க மறுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்றுள்ளது.
இந்நிலையில் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.