அழகிரி நடத்திய பேரணி ”அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய ஓன்று” அமைச்சர் சொல்கிறார்..!!

திருச்சி ,

அழகிரி நடத்திய பேரணி, அவரை தமிழக அரசியலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இன்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக.அழகிரி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் அழகிரி திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவரை கட்சியிலிருந்து நீக்குவதும் நீக்காமல் இருப்பதும் உட்கட்சி விவகாரம். புதன்கிழமை அழகிரி நடத்தி காட்டிய ஊர்வலம் சாதாரண ஒன்றல்ல, அரசியல் மாற்றத்தை உண்டாக்க கூடிய ஓன்று அது தமிழக அரசியலில் அவரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என்று கூறினார்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment