37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

டெக்சாஸ் மாலில் பயங்கர துப்பாக்கி சூடு.! குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏழு பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவரை காவல்துறை சுட்டுக்கொன்ற நிலையில், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மக்கள் ஒட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.