தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது பிறப்பித்து வருவகின்றன. 

தற்போது தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, நாகை, கரூர், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றம் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.