9 மாத பச்சிளம் குழந்தை-மனைவியை கொடூரமாக கொன்று -பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்

9 மாத பச்சிளம் குழந்தை-மனைவியை கொடூரமாக கொன்று -பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்

  • 9 மாத பச்சிளம் குழந்தை மற்றும் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
  • பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது

ஆந்திராவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையையும் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பிரகாசம் மாவட்டம் லிங்ககுண்டம் கிராமத்தில் கடந்த 3 ம் தேதி அன்று சாலையோரம் இளம்பெண் மற்றும் கைகுழந்தையுடன் எரிந்த நிலையில் சலமாக கிடந்துள்ளது.தகவல் அறிந்து வந்த காவலைத்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்து சென்றுள்ளார்.யார் அவர் என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் வந்தது கோட்டி என்பதும் அவர் தாமவாரிபள்ளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீசாரில் கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான்.

கோட்டி ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் 9 மாத கைக்குழந்தை உள்ளது.இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கோட்டி சம்பவம் நடைபெறுவதற்கு முன் மனைவியையும் தனது குழந்தையும் கொன்று பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube