800 விசைப் படகுகளை நிறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தம்…!!

800 விசைப் படகுகளை நிறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தம்…!!

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் மூழ்கச் செய்தனர். இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்தும், சிறையில் உள்ள 4 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், அங்குள்ள 800 விசைப்படகுகள் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் யாரும் இல்லாததால், மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *