8 மாத குழந்தை கடத்தல்.! போலீஸ் வலைவீச்சு.!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நடைமேடையில் தனது 8 மாத குழந்தையுடன் தூங்கிய பெண், எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்ட சினேகா என்பவர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் இவர், கணவரை பிரிந்து தனது 8 மாத குழந்தையுடன் சென்னை வந்து ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த அவர், கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களோடு வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்