ரஷ்யாவில் உள்ள 8 மாதமே ஆன பாடும் புலி – விலங்கியல் பூங்காவில் குவியும் பொதுமக்கள்!

ரஷ்யாவில் உள்ள 8 மாதமே ஆன பாடும் புலி – விலங்கியல் பூங்காவில் குவியும் பொதுமக்கள்!

ரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

புலி, சிங்கம் என்றாலே பொதுமக்கள் அருகில் செல்ல அச்சப்பட்ட தான் செய்வார்கள். பிறந்தது முதலே ஆர்வத்துடனும் கம்பீரமான குரலிலும் பிறரை அச்ச படுத்தக்கூடிய புலிகளை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் உள்ள பர்னால் எனும் ஒரு ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் எனும் பெயர் கொண்ட எட்டு மாதமே ஆன புலி ஒன்று வழக்கமாக உறுமும் புலிகளைப் போல் இல்லாமல் பாடுவது போல குரல் எழுப்பி வருகிறதாம்.

பிறந்தது முதல் இவ்வாறு தான் இந்த புலி பாடுவதாக அந்த விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வித்தியாசமான குரலில் பாடுவது போன்று ஒலி எழுப்பக் கூடிய இந்தப் 8 மாதமே ஆன ஷெர்ஹான் எனும் புலியை காண்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube