சீனாவில் எரிவாயு கசிவால் 8 பேர் பலி..!

சீனாவில் எரிவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சீன நாட்டில் உள்ள தலியன் நகரத்தில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிழந்துள்ளனர். இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிவித்த உடனே தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

தீ அணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் இதில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் கடுமையான தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.