தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமுள்ள 8 மாவட்டங்கள்.! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.!

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக 8 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுப்படுத்து பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று  இறப்பு எண்ணிக்கை குறைந்து 12 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் ஒற்றை இலக்கு மரணங்களும், கோவை மற்றும் விருதுநகரில் தலா 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மற்றும் விருதுநகரில் இறப்பு எண்ணிக்கை அதிகமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது முறையாக 119 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மரண எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக மதுரை, விருதுநகர் மற்றும் கோவை திகழ்கிறது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக சென்னை மற்றும் செங்கல்பட்டுக்கு அடுத்த இடத்தில் மதுரை உள்ளது. ஏனெனில் கடந்த 9 நாட்களில் மட்டும் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 4 மாநிலங்களில் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தேசிய மற்றும் மற்ற மாநிலங்களின் இறப்பு விகிதத்தின் சராசரியை விட 16 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாகவே உள்ளது. எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்டங்களில் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாலும், குறைவான பரிசோதனையாலும் அதிகம் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

2 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

10 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

12 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

14 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

15 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

15 hours ago