இளம்பெண்ணுக்கு வன்கொடுமை: பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!
இளம்பெண்ணுக்கு வன்கொடுமை: பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!
விருதுநகரில் 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பள்ளி சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை ஹரிஹரன் தன் நண்பர்கள் 3 பேருக்கு காட்டி உள்ளார்.
ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த வீடியோ அதேபகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 4 பள்ளி மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர், பள்ளி மாணவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிஹரன் உட்பட 8 பேர் மீது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.