தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன உபகரணங்கள் மற்றும் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் உருவாக்காட்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிடி ஸ்கேன்,மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளை கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.