ஐந்து ஆண்டுகளாக சென்னையில் 140 டன் அமோனியம் நைட்ரேட் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கொரானா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பெரும் போராட்டம் நிலவக்கூடிய சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிதே இந்த விபத்துக்கு காரணம் என அந்நாட்டு பிரதமர் ஹசன் டயப் அவர்கள் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு அவர் கண் கலங்கியது பலரது நெஞ்சையும் உருக்கியது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பேசுகையில், சென்னை துறைமுகத்துக்கு ஒட்டிய கிடங்கில் 740 டன் அமோனியம் 5 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே லெபனான் நாட்டில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பதற்கு இந்த மருந்துதான் காரணம். எனவே சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிவிபத்து ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…