உத்தரகண்ட் பனிப்பாறை வெடிவிபத்தில் 71 பேர் உயிரிழப்பு – சிதறிய உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 70-க்குமேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் பகுதியில் பனிப்பாறை வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 71 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்த இரண்டு மின் நிலைய கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த சுரங்கங்களில் வெள்ளநீர் புகுந்து அதிலும் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவ்விடத்திர்க்கு மீட்பு படையினர் சென்றுள்ள நிலையில், தற்போது இந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

author avatar
Rebekal