குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மேலும் 7,084 பேர் குணமடைந்தனர்!

குட் நியூஸ்: ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மேலும் 7,084 பேர் குணமடைந்தனர்!

ஆந்திராவில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. அதில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,053 ஆக உள்ளது. மேலும் 6,046 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,72,479 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி 50,776 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube