மகாராஷ்டிராவில் வெள்ளம் ! பயணிகளுடன் சிக்கித் தவிக்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல  பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. மலையின் காரணமாக விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால்  பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் இருந்த சுமார்  700-க்கும்  மேற்பட்ட பயணிகள்இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு  படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.