மும்பையில் உள்ள பள்ளி கழிப்பறையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.! மருத்துவர் சந்தேகம்.!

மும்பையில் உள்ள பள்ளி கழிப்பறையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.! மருத்துவர் சந்தேகம்.!

  • மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் ஏழு வயது சிறுமியை கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை.
  • கிரேயன் அல்லது பென்சில் கொண்டு பலத்த தாக்குதலைப் பயன்படுத்தியிருக்கலாம் மருத்துவர் சந்தேகம்.

மும்பையில் புறநகர் மல்வானியில் உள்ள பள்ளியின் ஏழு வயது சிறுமியை கழிப்பறைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் அந்த பள்ளிக்கு சென்று கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துருகிறது என்று, புகார் வந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமின் தாயார் அளித்த புகாரின்படி வெள்ளிக்கிழமை அவரது மகள் பள்ளியின் கழிப்பறைக்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்நிலையில், வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார். பின்னர் அவர் தனது மகளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் கூறுகையில், ஒரு கிரேயன் அல்லது பென்சில் கொண்டு பலத்த தாக்குதலை பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகத்திற்கு உட்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே போலீசார் ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் 4 மற்றும் 8 பிரிவுகளின் கீழ் மால்வானி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளியில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களின் காட்சிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று சென்றார்கள் ஆனால் அங்கே தற்போது வரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube