பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில், நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 போரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநரின் காலதாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீதிமன்றத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனினும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது வரலாற்றில் மறுக்கப்பட்ட நீதியாகவே பதிவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 போரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…