உத்ரகண்ட் மாநில நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!

உத்ரகண்ட் மாநில நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!

உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜும்மா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சேற்றில் புதைந்து தரைமட்டமாகியது.

இதுவரை இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Join our channel google news Youtube