கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..7 பேர் உயிரிழப்பு.!

எகிப்து: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

எகிப்திய தலைநகர் கெய்ரோவின் புறநகரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மத்திய கெய்ரோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள எல் ஒபூரில் உள்ள மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், முதல் கட்ட விசாரணைகளின்படி மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன.

மருத்துவமனை வெளியேற்றப்பட்ட நோயாளிகள் கெய்ரோவில் உள்ள ஒரு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டள்ளனர் .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.