சத்தீஸ்கர் அருகே லாரி மீது பஸ் மோதி 7 பேர் உயிரிழப்பு..!

ஒடிசாவின் கஞ்சாமில் பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லும் பஸ் ஒன்று சத்தீஸ்கர் ராய்ப்பூரில் உள்ள செரிகெடி என்ற இடத்தில் இன்று காலை லாரி மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், மேலும் தேவையான உதவிகளை வழங்க உடனடியாக ராய்ப்பூருக்கு செல்லுமாறு அமைச்சர் சுசாந்தா சிங்கிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.