7 பேரையும் குழந்தைகளுக்கு கூட தெரியும், ஆனால் ரஜினிக்கு தெரியவில்லையா …! வேல்முருகன்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் குழந்தைகளுக்கு கூட தெரியும் என்று  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் குழந்தைகளுக்கு கூட தெரியும், ஆனால் ரஜினிக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பேரறிவாளன் உள்பட 7 பேர் குறித்த கேள்விக்கு ‘எந்த 7 பேர்’ என கேட்ட ரஜினி, புரியாமல் இருக்கிறாரா? அல்லது புரிந்தும் புரியாததுபோல் திரையில் நடிப்பதுபோல் நடிக்கிறாரா?என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment