பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு..!

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. பெரு நாட்டில் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது என்ற போதிலும் 112 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.