6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.!

6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.!

  • மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 ஆசிரியர்கள் வன்கொடுமை செய்தனர்.
  • போக்சோ சட்டத்தின் கீழ்  2 ஆசிரியர்கள் மற்றும் மேலும் 3 பேர் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுவதாக கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அறைக்கு அழைத்து சென்ற சிறுமிக்கு கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ காட்டாமல் அந்த மாணவிக்கு சிறார் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை பள்ளிக்கு அருகில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர்.

இதையெடுத்து மகளை தேடி வந்த சிறுமியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சிறுமியின் தாய் கூறியுள்ளார். இது குறித்து பேச கூடாது எனவும் ,போலீசாரிடம் புகார் கொடுக்க கூடாது எனவும்  கட்டாயப்படுத்தி உறுதிமொழி வாங்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவர சிறுமியின் குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு 2 ஆசிரியர்கள் மற்றும் மேலும் 3 பேர் என 5 பேர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube