‘என்னைய மன்னிச்சிக்கோங்க அம்மா’- ஆன்லைன் கேமில் 40,000-ஐ இழந்த 6-ம் வகுப்பு சிறுவன் தற்கொலை…!

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேமில் ரூ.40,000-ஐ இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்.

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனை சிலர் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினாலும், சிலர், அதனை தீய வழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில், 6-ம் வகுப்பு பயின்று வரும் நோயியல் ஆய்வக உரிமையாளரின் மகன், இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடுகூட  தற்கொலை குறிப்பை வைத்து விட்டு சென்றுள்ளார்.

அந்த குறிப்பில் தன் தாயிடம் மன்னிப்பு கோரி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும், வங்கி கணக்கில் இருந்து ரூ 40,000 பணத்தை எடுத்ததாகவும், ஃப்ரீ பையர் விளையாட்டில் மூலம் பணத்தை வீணடித்ததாகவும் குறிப்பிட்டு தனது தாயாரை அழ வேண்டாம் என்றும் அந்த குறிப்பில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சிறுவனின் தந்தையும் தாயும் வீட்டில் இல்லாத நேரம் தான் , இந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் தாயார் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது அறிந்து தொலைபேசிக்கு வந்த தகவலின்படி அவரது மகனை திட்டியதாகவும், இதனையடுத்து, சிறுவன் அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

உள்ளே சென்று சில மணி நேரங்கள் கழித்தும் அவர் வெளியே வராததால், அவரது சகோதரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் அறையின் கதவை உடைத்து உள்ளே போன போது, சிறுவன் தாவாணியை பயன்படுத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறுவரின் இந்த செயல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

3 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

5 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

6 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

7 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

7 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

8 hours ago