சூடான் மோதலில் 676 பேர் உயிரிழப்பு – ஐ.நா அறிக்கை

சூடான் இராணுவத்திற்கும், ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 676 பேர் உயிரிழப்பு.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 676 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ஆயுதப் படைகளுக்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததால், கார்ட்டூம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 676 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5,576 பேர் காயமடைந்துள்ளனர் என்று OCHA தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) அறிக்கையின்படி, ஏப்ரல் 15 முதல் 936,000 க்கும் அதிகமான மக்கள் மோதலால் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 736,200 உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் சுமார் 200,000 பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் மோதல்கள் வெடித்ததில் இருந்து, சூடான் தலைநகர் கார்ட்டூமில் வசிப்பவர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டஜன் கணக்கான தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட பின்னர் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2023-ஆம் ஆண்டில் சுமார் 15.8 மில்லியன் சூடானியர்கள் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் போரின் விளைவாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்