மஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி!

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,990 ஆக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 6,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,990 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 3,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,04,687 ஆக உயர்ந்துள்ளது. அதில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, மஹாராஷ்டிராவில் 79,911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.