அக்டோபரில் 6,000 பேருக்கு சோதனை.! அடுத்த ஆண்டு விற்பனை.. அசத்தும் இங்கிலாந்து.!

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த, சோதனையின் முடிவை பொறுத்தே அடுத்து  சில நாட்களில் மேலும், 300 பேருக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 6,000 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு உலகளவில் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் எனவும், இம்பீரியல் கல்லூரி தெரிவித்துள்ளது. இதற்கு முன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி பரிசோதனைகள் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan