மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய 6 பேர் .! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் கார் கவிழ்ந்து 6 பேர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பீதியடைய செய்துள்ளது . இளைஞர்கள் 6 பேர் தங்களது நண்பனின் பிறந்தநாளை மொட்டையன்வயல் என்னும் கிராமத்தில் கொண்டாடியுள்ளனர்.

அதனையடுத்து மதுப்போதையில் இருந்த 6 பேரும் ஒரே காரில் அதிவேகமாக ஒட்டி வந்துள்ளனர் . அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் முன்பு தலைகீழாக கவிழ்ந்தது . கார் வேகமாக கவிழ்ந்ததில் காரினுள் இருந்த 2 பேர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். அதனையடுத்து தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்து மற்றுள்ளவரும் ஒவ்வொருவராக வெளியே வந்தனர் .

கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வீசப்பட்ட 2 பேர் உட்பட 6 பேரும் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர் . இந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தற்போது இந்த விபத்து குறித்து தேவக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுப்போதையில் காரை ஓட்டி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் . ஒரு நிமிட சந்தோஷத்திற்காக ஒரு சிலர் வாழ்க்கையே அழிக்கின்றனர் .

 

Leave a Comment