மத்தியப்பிரதேசத்தில் பேருந்து விபத்து: 6 பேர் பலி..!

மத்தியப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைத்துள்ள பெடலில் இன்று பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தெரிவித்த அப்பகுதி காவல்துறை அதிகாரி சுனில் லாடா, பேருந்தும் லாரியும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.