57 வயதான நபர் கொரோனாவுக்கு இறப்பு.! கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று போலி அறிக்கை வழங்கிய 3 பேர் கைது.!

கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என்று கூறி போலி அறிக்கை வழங்கிய சில நாட்களில் 57 வயதான நபர் இறந்ததை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 57 வயதான வங்கி மேலாளர் சின்ஹா என்பவர் கொரோனாவுக்கான பரிசோதனை செய்துள்ளார். ஆனால் தனியார் நோயறிதல் பரிசோதனை மையத்தில் உள்ள ஊழியர்கள் கொரோனா இல்லை என்ற போலி அறிக்கையை வழங்கியதுடன், சின்ஹாவுடன் ரூ. 2,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஒரு சில நாட்களில் சின்ஹாவின் உடல் மோசமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பின்னர், நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  அதனையடுத்து சின்ஹாவின் மனைவி போலி பரிசோதனை மையத்தின் மீது புகார் அளித்ததை அடுத்து 3 பேரை கொல்கத்தாபோலீசார்  கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட பிஸ்வாஜித் மற்றும் இந்திரஜித் சிக்தர் ஆகியோர் சகோதரர்கள் என்றும், அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், மற்றொருவர் அனித் பைரா ஒரு பிசியோதெரபி மையத்தை நடத்தி வருபவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Recent Posts

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

6 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

13 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

10 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago