கர்நாடகாவிற்கு மீண்டும் தேர்தல் -தேர்தல் ஆணையம் அறிவிப்பு ..!

கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த மேல்சபை சபாநாயகர் சங்கரமூர்த்தி, மற்றும் ராமச்சந்திர கவுடா, அமர்நாத் பட்டில், கணேஷ் கர்னிக் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள்  ரமேஷ் பாபு, மரிட்டிபே கவுடா ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதையொட்டி, கர்நாடக மேல்சபைக்கு ஜூன் 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 உறுப்பினர்களை ஆசிரியர்களும், 3 உறுப்பினர்களை பட்டதாரிகளும் தேர்வு செய்வார்கள்.
இதற்காக, தெற்கு கர்நாடகா, தென்கிழக்கு கர்நாடகா, தென்மேற்கு கர்நாடகா பகுதியை சேர்ந்த ஆசிரியர்களும், தென்மேற்கு கர்நாடகா, வடகிழக்கு கர்நாடகா மற்றும் பெங்களூரு நகர பட்டதாரிகளும் வாக்களித்து புதிய உறுப்பினர்களை தேர்வு  செய்யவுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 15-ம் தேதி தொடங்குகிறது. 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பபெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment