ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா.! 50 ஆடுகள் தனிமை.!

ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா.! 50 ஆடுகள் தனிமை.!

கர்நாடகாவில் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வளர்த்து வந்த 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆடு மேய்ப்பவர்கள்  கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வந்த சில ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பதைக் கவனித்த கிராம மக்கள் பீதியடைந்தனர்.

இப்போது எல்லா இடங்களிலும் கொரோனா பயம் இருப்பதால், விலங்குகளும் இந்த நோயால் பாதிக்கப்படும் என்று மக்கள் பயப்படுகிறார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்நிலையில், ஆடு மேய்ப்பவர் வளர்த்த அனைத்து ஆடுகளையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

author avatar
murugan
Join our channel google news Youtube