இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை..!66 ஆயிரம் டாலர் அபராதம்…!

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து  செய்து வருகின்றன.

இதனையடுத்து,ஆஸ்திரேலிய நாடும் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது.இருப்பினும்,இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல் மற்ற பிற நாடுகளின் வழியாக மக்கள் பலபேர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளின் வழியாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, தனது சொந்த நாட்டு மக்களாக இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.மேலும்,இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து இந்த நடைமுறையானது அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

3 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

4 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

5 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

6 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

6 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

7 hours ago