காணாமல் போன 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் – இந்திய ராணுவம்..!

காணாமல் போன 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் – இந்திய ராணுவம்..!

அப்பர் சுபன்சிரியில் இருந்து  காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மற்றொரு பக்கத்திற்குச் சென்ற 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் கேணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறினார்.

காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை  சீன ராணுவம் உறுதிப்படுத்தியதாக பாண்டே கூறினார். செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மறுபுறம் சென்றனர். அவர்களை நேற்று சீன இராணுவம் காணாமல் போன இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5- ம் தேதி சீனா இராணுவம் அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சுபன்சிரியின் நாச்சோ பிராந்தியத்தில் இருந்த 5 வீரர்கள் கடத்தியதாக கூறப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை  சீன ராணுவம்  உறுதிபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube