வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்களை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடகாவின் தடுப்பூசி திட்டம் குறித்து எடுத்துரைத்துள்ளார். மேலும் கர்நாடகாவிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது இது குறித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், கர்நாடக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…