கென்யாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

கென்யாவின், கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.

மத்திய கென்யாவிலுள்ள, கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக்கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது.

மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை மீட்டுள்ளனர், மேலும் மீட்கப்பட்ட சில பேருக்கு பலத்த காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கியாம்பு நகர கவர்னர் கிமானி வமாதங்கி தெரிவித்துள்ளார்.

கட்டிடம், இடிந்து விழுந்ததன் காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மோசமான வடிவமைப்பு மற்றும் ஒழுங்கற்ற கட்டுமான அமைப்பு போன்றவற்றால் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment