இந்தாண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..??

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதில் முதல் இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல் நாளில் 12.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் 5.81 கோடி வசூல் செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 2.85 கோடி வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 2.55 கோடி வசூல் செய்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 2.10 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இன்று வெளியான கர்ணன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.