குஜராத்தில் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5அடி முதலை மீட்பு.!

குஜராத்தில் பப்ளிக் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள முதலை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலைகளில் உள்ள பப்ளிக் பெஞ்சின் அடியில் மறைந்து இருந்துள்ளது. அதனை கண்டறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதனையடுத்து விலங்குகளுக்கான கொடுமையை தடுக்கும் குஜராத் சொசைட்டி (ஜிஎஸ்பிசிஏ) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெஞ்சின் அடியில் மறைந்திருந்த ஐந்து அடி நீளமுள்ள முதலையை மீட்டு ஊர்வன வனத்துறையினரிடம் ஒப்படைத்த. சில நேரங்களில் மழையின் காரணமாக காட்டு விலங்குகள் திறந்த வெளியில் வருவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.