ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி-ஜைடஸ் கெடிலா…!

ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி-ஜைடஸ் கெடிலா…!

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை  தொடர்ந்து ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாகியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தடுப்பு மருந்தின் திறன் குறித்த அறிக்கை இம்மாத இறுதிக்குள் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்படும். டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி என்பதால் உருமாறிய வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்த முடியும் என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube