வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு..!

வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு..!

வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அப்பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இறந்துள்ளனர். கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்துள்ள பெற்றோர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவற்றை அறியாத குழந்தைகள் இரவில் தூங்கி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது நிலச்சரிவில் சிக்கி வெளியேற முடியாமல் 5 குழந்தைகளும் இறந்துள்ளனர். இதில் 2 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேபோன்று நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8  உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube