ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் மிக அதிக அளவாக ரிக்டர் அளவுகோலில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மான்ஸ்ஃபீல்ட்  பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், மெல்பர்ன், சிட்னி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. காலை சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் தற்பொழுது வரை வெளியாகவில்லை.

author avatar
Rebekal