கொழும்பில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 239 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.