மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு…! 4 பேர் சுட்டுக்கொலை…!

CISF படையினர்  துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுரத்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாஹா கருதப்படுகிறது. இதனையடுத்து, அங்கு மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், CISF படையினர்  துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.