Categories: Uncategory

சாத்தான்குளத்தில் ஆசிரியையிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது..

                                                             

தூத்துக்குடி; மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேம்பாடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மகள் மகேசுவரி (வயது 22). இவர், சாத்தான்குளத்திலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்  நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து ஊருக்கு செல்வதற்காக, சாத்தான்குளம் பன்னம்பாறை விலக்கில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த  2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் அங்கு வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒருவன், மகேசுவரி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொள்ள 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ஒருவன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகேசுவரி கூச்சல் போட்டார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற பகுதியில் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்றனர். அப்போது செட்டிகுளம் விலக்கு பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மறுகால்குறிச்சியை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி (25) என்பதும், மகேசுவரியிடம் நகை பறித்து கும்பலில் ஒருவன் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Dinasuvadu desk

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

6 mins ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

19 mins ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

49 mins ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

1 hour ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

2 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

2 hours ago