144 தடை உத்தரவை மீறிய 48 தென்காசி வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு!

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைத்தால் தான் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், தற்போது பலரும் அந்த உத்தரவை மீறி ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் வலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த 144 தடை உத்தரவை மீறி தென்காசியில் வாகனம் ஓட்டிய 48 பேரை பிடித்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Rebekal